ஓர் அருமை மாலை வேளை. பேருந்தில் இறங்கியதும் சுமார் ஒன்னரை மையில் தூர நடை. வழியில் இரண்டு பக்கமும் நன்செய் வயல் வெளிகள் நெற்கதிர் இல்லாமல் நெல் வேரறுத்த வெற்றுக் காடாக. எதிர் திசையில் தென்கிழக்கில் கிழக்கு பார்த்த ஒரு சிறு கோயில் கோபுரம். ஒரு மாபெரும் தலைவன் அமைதியாக உறங்கும், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சிறு சோலை கொண்ட அழகிய கோயில். வேல் கொண்டு தமிழ் குடி தாங்கிய முருகனின் ஆறு முக முகப்பு [...]
சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவன வற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர்மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், [...]
“செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். “சேது சமஸ்தானம்” என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி – பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி “கவுரி விலாசம்” என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த [...]